இந்நிலையில் அமைக்கப்பட்டுவரும் கட்டடம் வீதி எல்லைக்குள் அமைவதனால் அதை நிறுத்தக் கோரியும் தமது எல்லைக்குள் அமைக்கப்பட்ட கட்டடங்களை அகற்றப் பணித்தும் வீதி அபிவிருத்தி அதிகார சபையினால் நேற்றைய தினம் 25.05.17 கடிதம் அனுப்பப்பட்டுள்ளது.
கல்குடா மற்றும் வாழைச்சேனை மக்களுக்கு தமிழ் பாராளுமன்ற உறுப்பினர் ஒருவர் இருந்தும் இல்லாத நிலையில் பொது அமைப்புகளின் கவனத்துக்கு இந்தப் பிரச்சனை கொண்டுவரப்பட்டுள்ளது. இந்த பிரச்சனைகளை ஊடகங்களில் வெளிக்கொணர்வதன் மூலம் இனங்களுக்கிடையே பிணக்குகளைத் தோற்றுவிக்கும் இனநல்லிணக்கத்துக்கு எதிரான இவ்வாறான சட்டவிரோத செயற்பாடுகள் நிறுத்தப்பட வேண்டும்
0 commentaires :
Post a Comment