அண்ணாவியார் க.நோஞ்சிப்போடி அவர்கள் 1913.02.01 ஆந் திகதி கன்னங்குடாவில் பிறந்துள்ளார். கூத்துப் பாரம்பரியம் மிக்க கிராமத்தில் வாழ்ந்த இவர் தனது 17 ஆவது வயதில் அண்ணாவியாராகத் தகுதிபெற்றுள்ளார். தற்போது மட்டக்களப்பில் வாழ்ந்தகொண்டிருக்கும் அண்ணாவிமார்களுள் நூறு வயதைக் கடந்த வயதில் மூத்தவராகவும் வாழ்ந்தவர்.
மட்டக்களப்பு படுவான்கரைப் பிரதேசத்தின் வடமோடி, தென்மோடி கூத்துப் பாரம்பரியங்கள் செழுமையாக வளர்ந்து இன்று வரை இக்கூத்துப் பாரம்பரியம் மிகவும் வீரியத்துடன் திகழ்வதற்கு பங்களிப்பு வழங்கிய முதன்மைக் கூத்தராக இவர் விளங்கியுள்ளார்.
இவ்வாறு மட்டக்களப்பு பாரம்பரிய கூத்துக்களிலும் பாரம்பரிய உள்ளுர் அறிவு முறைகளிலும் மிகவும் புலமைபெற்றுத் திகழ்ந்த முதுபெரும் அண்ணாவியார் கணபதிப்பிள்ளை நோஞ்சிப்போடியாரின் இழப்பு தமிழ் சமூகத்திற்கு ஏற்பட்ட பேரிழப்புக்களுள் ஒன்றாகும்