(20.04.2012) மட்டக்களப்பு மாவட்டத்திற்கு விஜயம் மேற்கொண்டிருந்த இந்திய மக்களவை எதிர்க்கட்சி தலைவி சுஸ்மா சுவராஜ் தலைமையிலான நாடாளுமன்ற குழவினரை கிழக்கு மாகாண முதலமைச்சரும் தமிழ் மக்கள் விடுலைப் புலிகள் கட்சியின் தேசியத் தலைவருமான சிவநேசதுரை சந்திரகாந்தன் சந்தித்து உரையாடும் போதே மேற்கண்டவாறு அவர் தெரிவித்தார்.
அவர் தொடர்ந்து கருத்து தெரிவிக்கையில், மாகாண சபை முறைமையினை தோற்றுவித்த பெருமைக்குரியது இந்திய அரசுதான்.1987ஆம் ஆண்டு அப்போதைய இந்திய பிரதமர் ரஜீவ்காந்தி மற்றும் இலங்கையின் ஜனாதிபதி ஜே.ஆர் ஜெயவர்த்தன ஆகிய இருவருக்குமிடையில் செய்து கொண்ட ஒப்பந்த்தின் பிரகாரம் தோற்றம் பெற்றதே இன்றைய மாகாண சபை முறைமையாகும். இம் மாகாண சபைக்கென அரசியல் யாப்பில் பரிந்துரைக்கப்பட்டுள்ள அனைத்து அதிகாரங்களும் வழங்கப்படவேண்டும். அதனையே நாமும் வலியுறுத்தி வருகின்றோம்.அதே வேளை இதனை முழுமையாக அமுல்படுத்துவதற்கான தேவையும் தற்போது உணரப்பட்டுள்ளன.
அவர் தொடர்ந்து கருத்து தெரிவிக்கையில், மாகாண சபை முறைமையினை தோற்றுவித்த பெருமைக்குரியது இந்திய அரசுதான்.1987ஆம் ஆண்டு அப்போதைய இந்திய பிரதமர் ரஜீவ்காந்தி மற்றும் இலங்கையின் ஜனாதிபதி ஜே.ஆர் ஜெயவர்த்தன ஆகிய இருவருக்குமிடையில் செய்து கொண்ட ஒப்பந்த்தின் பிரகாரம் தோற்றம் பெற்றதே இன்றைய மாகாண சபை முறைமையாகும். இம் மாகாண சபைக்கென அரசியல் யாப்பில் பரிந்துரைக்கப்பட்டுள்ள அனைத்து அதிகாரங்களும் வழங்கப்படவேண்டும். அதனையே நாமும் வலியுறுத்தி வருகின்றோம்.அதே வேளை இதனை முழுமையாக அமுல்படுத்துவதற்கான தேவையும் தற்போது உணரப்பட்டுள்ளன.
எனவே இது விடயத்தில் அதாவது மாகாண சபைகளுக்கான அதிகாரப்பகிர்வு விடயத்தில் இந்தியாவுக்கு அதனை தோற்றுவித்ததன் அடிப்படையில் அதிகமான வகிபங்கு இருக்கு என்பது குறிப்பிடத்தக்கது என முதலமைச்சர் சந்திரகாந்தன் சுட்டிக்காட்டினார்.