கடத்தப்பட்டது தொடர்பில் சகாயமணியின் மனைவியடம் வினவிய போது அவர் குறிப்பிட்டது.
தனது கணவனை கடத்தியவர்கள் யார் எனத் தனக்கு நன்றாகத் தெரியும். அத்தோடு எனது கணவன் ஓர் மக்கள் பிரதிநிதி மக்கள் பிரதிநிதிக்கே இந்த நிலை என்றால் சாதாரண மக்களின் நிலை என்ன? மேலும் மட்டக்களப்பு மாநகர சபையானது, என் கணவர் கடத்தப்பட்டது தொடர்பில் எதுவித நடவடிக்கைகளையும் மேற்கொள்ளவில்லை. குறிப்பாக மாநகர மேயர் திருமதி சிவகீதா பிரபாகரன் இது தொடர்பில் எதுவித நடவடிக்கையினையும் மேற்கொள்ளவில்லை. நான் இன்னும் ஓரிரு நாட்களில் எனது கணவன் வீடு திரும்பவில்லை என்றால் மாநகர சபை மேயருக்கு எதிராக உண்ணாவிரதம் இருந்து எனது பிள்ளைகளுடன் தீக்குளிக்கவும் தயங்கமாட்டேன் என மிகவும் மன வேதனையுடன் தெரிவித்தார்.
0 commentaires :
Post a Comment